1/24/2006

1. முதல் ஏழு நாட்கள்


துவக்கத்தில் கடவுள் வானத்தையும், பூமியையும் உருவாகினார். பூமி ஒழுங்கான வடிவமற்றதும், வெறுமையானதுமாயிருந்தது. இருள் படர்ந்திருந்தது. கடவுள் "ஒளி உண்டாகுக" என்றார், ஒளி உண்டானது.

வெளிச்சத்தை 'பகல்' என்றும் இருட்டை 'இரவு' என்றும் பெயரிட்டார். இருளும் ஒளியும் சேர்ந்து முதல் நாளாயிற்று.

பின்பு, பூமியிலிருந்த நீரை மேல் கீழாகப் பிரித்து, மேலிருக்கும் நீரைதாங்க(மேகங்கள்) ஆகயத்தை உருவாக்கினார். இதற்கு 'வானம்' எனப் பெயரிட்டார். இருளும் ஒளியும் சேர்ந்து இரண்டாம் நாளாயிற்று.

மூன்றாம் நாள் பூமியிலுள்ள நீரை ஒன்றாய்க் கூட்டி, தரைவெளிகளை உண்டாக்கினார். ஒன்றுசேர்த்த நீர் கடலானது. "பூமி எல்லாவித புல் பூண்டுகளையும், மரம் செடிகளையும் உருவாக்குக" எனக் கட்டளையிட்டார், அதன் படியே அழகிய மலர்தரும் செடிகளும், புல்வெளிகளும், கனிதரும் மரங்களும் உண்டாயின.

அடுத்தநாள், இரவை ஆள நிலவையும், நட்சத்திரங்களையும், பகலை ஆள சூரியனையும் உருவாக்கி ஆகாயத்தில் வைத்தார்.

ஐந்தாம் நாள் நீரில் நீந்தும் உயிரினங்களையும் வானத்துப் பறவைகளையும் படைத்தார்.

ஆறாம் நாள் கடவுள் நிலத்தில் ஊர்வன, நடப்பனவாகிய விலங்குகள் அனைத்தையும் படைத்தார். பூமியை ஆட்சி செய்ய, தன் சாயலில், ஆணும் பெண்ணுமாக மனிதனைப் படைத்தார்.

இவை எல்லாம் நல்லவையே எனக் கண்டார். பகலும் இரவுமாகி ஆறாம் நாள் கழிந்தது.

எல்லாம் உருவாக்கியதும் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார்.

0 Comments:

Post a Comment

<< Home