1/24/2006

2. ஏதேன், ஆதாம் மற்றும் ஒரு விலா எலும்பு


கடவுள் உலகைப் படைத்தபின், கிழக்கே உலகின் அனைத்து வளங்களும், சந்தோஷங்களும் நிறைந்த ஒரு தோட்டத்தை உருவாக்குகினார். இதற்கு 'ஏதேன்' எனப் பெயர்.

தன் மூச்சுக்காற்றை ஊதி ஆதாமுக்கு உயிர் கொடுத்து ஏதேன் தோட்டத்தில் அவனை நிறுவினார்.

அந்தத் தோட்டத்தின் நடுவில்தான் நன்மை தீமையை உணரச்செய்யும், கனிதரும் மரம் இருந்தது.

கடவுள் ஆதாமிடம், "இங்கிருக்கும் எல்லா மரங்களின் கனிகளையும் நீ உண்ணலாம், ஆனால் நன்மை தீமையை உணரச் செய்யும் இந்த மரத்தின் கனிகளை உண்ணக்கூடாது, உண்டால் நீ இறப்பது நிச்சயம்" என எச்சரித்தார்.

ஆதாம் எல்லா ஜீவராசிகளுக்கும் பெயரிட்டான்.

அவன் தனிமை கண்டு கடவுள், இவனுக்கு ஒரு துணையை செய்வோம் என, அவனைத் தூங்கச் செய்தார். ஆதாம் தூங்கும்போது அவனது விலா எலும்பில் ஒன்றை எடுத்து பெண்ணைச் செய்து ஆதாமிடம் கொண்டுவந்தார். அவனும் அவளுக்கு 'ஏவாள்' எனப் பெயரிட்டழைத்தான்.

இருவரும் நிர்வாணமாயிருந்தும் வெட்கமில்லாதிருந்தனர். ஆதம் என்றால் 'கடவுளால் உருவாக்கப்பட்டவன்' என்று பொருள், எவாள் என்பதற்கு 'உயிரளிப்பவள்' (life giving) என்று பொருள். கவலை ஏதுமின்றி உல்லாசமாய் இருவரும் ஏதேனை அனுபவித்தனர்.

0 Comments:

Post a Comment

<< Home