3/17/2006

28. பயணம் துவங்கியது

சோதனை மேல் சோதனை வந்தும் பாரோ மனமிரங்கவில்லை. எபிரேயர்களை விடுவித்துவிட மறுத்தான்.

கடவுள் மோயீசனிடம்,"உன் மக்களை எகிப்திலிருந்து விடுவித்துச் செல்லும் காலம் வந்துவிட்டது. பாரோவின் மனம் திருந்தும்படிக்கும், கடவுள் இஸ்ராயேலுடன் இருக்கிறார் என்பதை காண்பிக்கவும் இறுதியாய் ஒரு கொடுமை எகிப்தியருக்குச் செய்யப்படும். அந்த நாளில் எபிரேயர்கள் எகிப்தைவிட்டு வெளியேற தயாராயிருக்கவேண்டும்.

அழிக்கும் தூதன் ஒருவன் இரவில் வந்து எகிப்தியரின் முதல் ஆண் குழந்தைகளைக் கொன்று போடுவான். எபிரேயர்கள் ஒரு வயது நிரம்பிய அப்பழுக்கில்லாத ஆட்டுக்குட்டி ஒன்றை பலி செய்து அதன் இரத்ததை தங்கள் கதவுகளில் பூசி வைப்பார்களாக. இரத்தம் பூசப்பட்ட வீடுகளை அழிக்கும் தூதுவன் கடந்து போவான்.

சுட்ட ஆட்டிறைச்சியோடு கசக்கும் கீரையும் புளிக்காத அப்பத்தையும் உண்ணுங்கள். தூதுவன் உங்கள் வீட்டைக் கடந்ததும் பயணிக்கத் தயாராயிருங்கள். எகிப்தியரிடம் ஆடை அணிகலன்களையும் போர்வைகளையும் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். இதை அவர்கள் உங்களுக்குத் தரச் செய்வேன்." என்றார்.

மோயீசன் இதை எபிரேயர்களுக்குச் சொல்ல அவர்களும் சொன்னது போல செய்தனர்.

அன்றிரவு அழிக்கும் தூதுவன் வந்து பாரோ முதல் எகிப்தியரின் கடைசி அடிமை வரையிலான வீடுகளில் உள்ள அனைத்து முதல் ஆண் பிள்ளையையும் கொன்று போட்டான்.

எகிப்தில் என்றுமே இல்லாதபடி ஓலம் கேட்டது. பாரோ மனம் தளர்ந்தான். எபிரேயர்களை அவர்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு புறப்படச்சொல்லி மோயீசனுக்கு செய்தி அனுப்பினான்.

கடவுளின் தூதன் கடந்து சென்ற (Passover) நாள் யூதர்களின் மிகப் புனிதமான நாள், இயேசு அருந்திய கடைசி உணவு (The Last Supper) இதை நினைவுகூறத்தான்.

மொத்தம் ஆரு லட்சம் ஆண்களும் அவர்களது குடும்பமும் உடமைகளும் கால்நடகளும் எகிப்தைவிட்டு பயணித்தனர்.

0 Comments:

Post a Comment

<< Home