3/09/2006

22. பாரோவின் கனவு

எகிப்திய அரசன் பாரோவிற்கு ஒரு இரவில் இரு கனவுகள் வந்தன. அந்தக் கனவுகளை புரிந்து கொள்ள ஆசைப்பட்டான். எகிப்திலுள்ள அறிஞர்கள் யாராலும் அந்தக் கனவுகளுக்கு விளக்கம் கூறமுடியவில்லை. மன்னனின் கனவுகளை அறிந்த தலமை பட்லர் ஜோசப் தன் கனவுக்கு சரியான விளக்கமளித்தை பாரோவிடம் சொல்ல அவனும் ஜோசப்பை அவைக்கு அழைத்து வரச்சொன்னான்.

ஜோசப் அவைக்கு வந்தான். பாரோ அவனிடம் தன் இரு கனவுகளையும் சொன்னான்,"முதல் கனவில் நான் நைல் நதிக்கரையில் நின்றுகொண்டிருந்தேன், திடீரென ஏழு கொழுத்த பசுக்கள் ஆற்றிலிருந்து தோன்றி அருகே புல் மேய்ந்தன. பின்னர் ஏழு மெலிந்து போன பசுக்கள் தோன்றின. கடும் பசியில் அவை கொழுத்த மாடுகளைத் தின்றன. அதன் பின்னும் பசி அடங்காமல் புல் மேய்ந்தன"

"இரண்டாம் கனவில் வயல்வெளியில் நின்றிருந்தேன் ஒரு சோளச் செடியில் ஏழு அழகிய முழுதாய் விளைந்த தட்டைகள் விளைந்தன. கொஞ்ச நேரம் கழித்து ஏழு காய்ந்த தட்டைகள் தோன்றி, நல்ல சோளத்தட்டைகளைத் தின்று அழித்தன. இந்தக் கனவுகளுக்கு விளக்கம் சொல்" என்றான்.

ஜோசப், "கடவுள் எகிப்தின் எதிர்காலத்தை உமக்கு காட்டியுள்ளார். ஏழு பசுக்களும் ஏழு தட்டைகளும் ஏழு வருடங்களை குறிக்கும். எகிப்தில் வரும் ஏழு வருடங்கள் செழிப்பானதாயும் அதன் பின் ஏழு வருடங்கள் வறட்சி மிகுந்ததாயும் இருக்கும்" என்று விளக்கம் தந்தான்.

பாரோ இந்த விளக்கத்தினால் மனம் மகிழ்ந்தான். ஜோசப்பை எகிப்தின் ஆளுநராக்கினான், ஒரு எகிப்திய பெண்ணையும் அவனுக்கு மணம் முடித்துவைத்து,"அரசன் எனக்கு அடுத்த படியாக நின்று எகிப்தை ஆள்வாய்" என்றான். அதே போல ஜோசப் சென்ற இடமெல்லாம் மக்கள் அவனுக்குப் பணிந்தனர்.

பக்கத்து ஊர்களில் தானியக் கிடங்குகளை கட்டி ஏழு செளிப்பான வருடங்களிலும் தானியங்களை சேர்த்துவைத்தான் ஜோசப். பஞ்சம் வந்தபோது எகிப்தியர்களுக்கும் இன்னும் பலருக்கும் சேர்த்த தானியங்களை விற்கத் துவங்கினான். அப்போது....

0 Comments:

Post a Comment

<< Home

Statcounter