21. கனவுகளைச் சொல்பவன்

பாரோ தன் தலமை உபசரிப்பாளரையும்(Butler) தலமை ரொட்டி செய்பவரையும்(Baker) சிறையிலடைத்திருந்தான்.
இருவருக்கும் ஜோசப் சேவகம் செய்தான்.
ஒரு இரவில் இருவருக்கும் கனவுகள் வந்தன. ஜோசப் அவர்களிடம் கேட்க, பட்லர், "என் கனவில் மூன்று கிளைகளுடைய ஒரு திராட்சை கொடி இருந்தது, துளிர்விட்டு மலர்ந்து கனிகள் வந்தன. என் கையில் பாரோவின் ரசக் கோப்பை இருந்தது. அந்தப் பழங்களைப் பிழிந்து பாரோவிற்க்கு வழங்கினேன். இதற்கு அர்த்தம் சொல்ல முடியுமா?" என்றான்.
ஜோசப்,"கடவுளால் கனவுகளுக்கு அர்த்தம் சொல்ல முடியும் என்றான். " கடவுளின் உதவியோடு கனவின் அர்த்தம் சொல்ல ஆரம்பித்தான்.
"மூன்று கிளைகள் மூன்று நாட்களை குறிக்கின்றன. மூன்று நாட்களில் உன்னை பாரோ விடுதலை செய்வார். மீண்டும் உன்னை சேவகம் செய்ய ஏற்றுக்கொள்வார். அப்போது நான்தான் இதை உனக்குச் சொன்னேன் என்பதை பாரோவிடம் சொல். நான் அடிமையாய் வந்தவன், ஒரு குற்றமும் செய்யாமல் சிறையிலுள்ளேன்" என்றான்
ரொட்டிக்காரன் இதைக் கேள்விப்பட்டதும் தன் கனவை சொன்னான்,"மூன்று கூடைகளில் ரொட்டிகளை பாரோவுக்காக எடுத்துச் சென்றுகொண்டிருந்தேன், மேலேயிருந்த கூடையிலிருந்து பறவைகள் ரொட்டிகளை கொத்திக்கொண்டிருந்தன". என்றான்.
ஜோசப் அவனிடம்,"மூன்று கூடைகளும் மூன்று நாட்கள். மூன்று நாட்களில் பாரோ உன்னை கழுவேற்றுவார். உன் உடலை பறவைகள் கொத்தித்தின்னும்" என்றான்.

ஜோசப் சொன்னது போல மூன்று நாட்களில் இருவருக்கும் நடந்தது.
பட்லர் பாரொவிடம் ஜோசப்பை பற்றி சொல்லாமல் போனான்.
இரு வருடங்களுக்குப் பிறகு....
0 Comments:
Post a Comment
<< Home