3/06/2006

17. யாக்கோபின் மாமன் மகள்கள்


யாக்கோபு ஊரைவிட்டு ஓடிப்போகையில் ரெபெக்காவின் அண்ணன் லபானை சந்திக்கிறான். தன் தங்கையின் அன்பு மகன் யாக்கோபை கண்டதும் லபான் மகிழ்வடைந்தான். "நீ என்னுடன் வேலை பார்க்க உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்" என்றான். யாக்கோபு லபானின் மகள் ரேச்சல் மீது ஆசை கொண்டிருந்தான். "நான் உம்மிடம் ஏழு வருடங்கள் வேலை பார்ப்பதற்கு ஈடாக உம் அழகிய மகள் ரேச்சேலை எனக்கு மணம் செய்து தருவீரா?" என்றான் யாக்கோபு. லபான் சம்மதித்தான்.

ஏழு வருடங்கள் கழிந்ததும் லபானனொரு பெரிய திருமண விருந்து வைத்தான். தன் மகளை யாக்கோபிற்கு மணம் செய்து வைத்தான்.

திருமணம் முடிந்தது, யாக்கோபு தன் மனைவியின் முகத்தை மூடியிருந்த முகத்திரையை விலக்கிப் பார்த்தான்..அதிர்ச்சியுற்றான். அது ரேச்சேலின் மூத்தவள் லேகா.

தன் மாமன் தன்னை வஞ்சித்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டான். லபான் யாக்கோபிடம், "மூத்தவள் இருக்க இளையவளுக்கு மணம் முடிப்ப்பது எப்படி? இன்னும் ஏழு வருடங்கள் வேலை செய்து ரேச்சேலை மணந்துகொள்" என்றான்.

அப்படியே இன்னும் ஏழு வருடங்களுக்கு வேலை செய்து ரேச்சேலல மணந்துகொண்டான்.

சகோதரிகல் இருவருக்குமிடையே பலத்த பொறாமையும் போட்டியுமாயானதில் யாக்கோபுக்கு குழந்தைகள் பத்துக்கும் மேல்.

யாக்கோபு செல்வந்தனானான். இது லபானுக்கும் அவன் மகன்களுக்கும் பொறாமையூட்டியது.

கடவுள் யாக்கோபை கானான் நாட்டிற்குத் திரும்பச் சொன்னார். அவனும் யாருக்கும் சொல்லாமல் தன் குடும்பம், வேலையாட்கள் கால்நடைகளோடு கிளம்பி கானானை நோக்கி பயணித்தான்.

லபான் யாக்கோபு ஓடிப்போனதை கேள்விப் பட்டு கோபத்துடன் அவனை பின் தொடர்ந்தான். ஆனால் கடவுள் யாக்கோபுற்கு எதிரான கோபத்தை மாற்றினார். லபான் யாக்கோபை நல்லமுறயில் சந்தித்து வாழ்த்தினான்.

0 Comments:

Post a Comment

<< Home