2/16/2006

9. மூன்று வழிப்போக்கர்கள்


ஆபிரகாமுக்கு 99 வயதாகும்போது கடவுளும் இரு தூதர்களும் அவரின் கூடாரத்திற்கு வழிப்போக்கர்களாய் வந்தனர்.

ஆபிரகாம் அவர்களை உபசரிக்க, விருந்துண்டபின் கடவுள் ஆபிரகாமை நோக்கி "அடுத்த இளவேனில் காலத்தில் உனக்கு சாரா ஒரு மகனை பெற்றுத் தருவாள்" என்றார். திரை மறைவிலிருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த சாரா 'எனக்கும் ஆபிரகாமுக்கும் வயதாகிப் போனதே எப்படி எனக்கு மகன் பிறப்பான்' என் நினைத்து சிரித்தாள்.

கடவுள் அளிடம் "ஏன் சிரிக்கிறாய். கடவுளால் ஆகாதது எதுவுமில்லை என உனக்குத் தெரியாதா?" என "அவள் நான் சிரிக்கவில்லை" என பொய் சொன்னாள்.

விருந்துக்குப் பின் கடவுள் தூதர்களோடு ஆபிரகாமும் புறப்பட்டு சோதோம் கொமெரா நகரங்களை பார்க்கும்வகையில் ஒரு குன்றின்மேல் ஏறி நின்றனர். கடவுள் ஆபிரகாமைப் பார்த்து,"சோதோம் கொமெராவின் பாவங்கள் அதிகரித்துவிட்டன. அவர்களின் பாவங்களுக்காக இந்த நகரங்களை அழிப்பேன்" என்றார். இரு தேவதூதர்களும் சோதோமை நோக்கி நடந்தனர்.

ஆபிரகாம் கடவுளிடம்,"பாவம் செய்பவர்களோடு சேர்த்து நல்லவர்களையும் அழித்துவிடுவீரே. நான் சோதோமில் 50 நல்லவர்களை கண்டெடுத்தால் அதை அழிக்காமல் விடுவீரா?" என்றார்.

கடவுளும்,"நீ 50 நல்லவர்களை சோதோமில் கண்டால் அதை அழிக்கமாட்டேன் என்றார்". கொஞ்சம் யோசனைக்குப் பின் ஆபிரகாம் கடவுளிடம்,"50ல் ஐந்து குறைந்தாலும் சோதோமை அழிப்பீரா?" என்றார். "45நல்லவர்களுக்காக சோதோமை அழிக்காமல் விடுவேன்" என கடவுள் சொன்னார்.

ஆபிரகாம் மீண்டும்,"40 பேருக்காக?"

கடவுள்,"அழிக்கமாட்டேன்".

"கோபம் வேண்டாம். 30 பேர் மட்டுமிருந்தால்?"

"அழிக்கமாட்டேன்"

"20 நல்லவர்களுக்காக?"

"அழிக்கமாட்டேன்".

"10 பேர் மட்டுமிருந்தாலோ?"

"அந்த 10 நல்லவர்களை முன்னிட்டு சோதோமை அழிக்கமாட்டேன்" என்றார் கடவுள். அதன்பின் ஆபிரகாம் தன் கூடாரத்துக்குத் திரும்பினார்.

ஆபிரகாமின் அண்ணன் மகன் லோத்து சோதோமில் வாழ்ந்துவந்தான்.

சோதோமும் கொமெராவும் அழிக்கப்பட்டனவா...?

1 Comments:

At 9:24 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

வார இறுதி விடுமுறைக்கு செயிண்ட் லூயிஸ் செல்வதால் பின்னூட்டங்கள் மட்டுறுத்த நேரமாகலாம்.

 

Post a Comment

<< Home

Statcounter