2/22/2006

11. லோத்துவின் மகள்கள்

லோத்து சோதோமிலிருந்து வெளியேறி சோவார் என்னும் ஊரை சென்றடைந்தார். பின்னர் சோவாரில் வாழ்வதும் பாதுகாப்பல்ல என பயந்து அருகிலுள்ள ஒரு குகைக்குள் சென்று தன் இரு மகள்களோடும் வாழத்துவங்கினார்.

லோத்துவின் மூத்த மகள் இளையவளை நோக்கி,"நம் தந்தையோ முதியவர், வேறு திருமணம் செய்துகொள்ள நமக்கு வேறு ஆடவர்கள் இங்கு இல்லை. நம் இனம் விருத்தியாகும்படி நம் தந்தையை திராட்சை ரச மது அருந்தச் செய்து அவரோடு உறவுகொள்வோம்." என்றாள்.

அப்படியே அன்றிரவு லோத்துவுக்கு திராட்சரசம் அளித்து அவர் அறியாதபடி மூத்தவள் அவரோடு உறவு கொண்டாள். இளையவளும் அடுத்தநாள் லோத்துவோடு உறவு கொண்டாள். பின்னர் கருத்தரித்து இருவரும் குழந்தை பெற்றுக்கொண்டனர்.

மூத்தவள் தன் குழந்தைக்கு 'மோவோபு' என்றும் இளையவள் குழந்தைக்கு 'பென் அம்மி' என்றும் பெயரிட்டனர்.

பின் குறிப்பு: இந்தக் கதைக்கு படங்கள் தேவையில்லை :)

0 Comments:

Post a Comment

<< Home