2/24/2006

14. ரெபெக்கா

ஈசாக்குக்கு திருமண வயது வந்தபோது ஆபிரகாம் அவரின் தலைமை வேலையாளை அழைத்து,"என் சொந்த நாட்டிற்குப்போய் என் மகன் ஈசாக்கை மணமுடிக்க ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து வருவேன் என எனக்கு சத்தியம் செய்" என்றார். அந்த நம்பத்தகும் வேலைக்காரனோ,"ஒரு பெண் எப்படி என்னை நம்பி இத்தனை தூரம் வருவாள்?" என்றான். " அப்படி வரவில்லையென்றால் உன் சத்தியத்திலிருந்து நீ விடுதலை பெறுவாய்." என ஆபிரகாம் அவருக்குச் சொல்லவே, வேலையாள் தேவையான பொருட்களோடும் ஒட்டகங்களோடும் ஆபிரகாமின் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றான்.

ஆபிரகாமின் ஊரை அடைந்ததும் கடவுளிடம் வேண்டிவிட்டு,"இதோ இந்த கிணத்துக்கரையில் நான் காத்திருப்பேன். இங்கு நீர் இறைக்க வரும் பெண்களிடம் நீர் கேட்பேன். எவள் எனக்கும் என் ஒட்டகங்களுக்கும் நீர் மொண்டு தருகிறாளோ அவளை என் தலைவரின் மகன் மணமுடிக்குமாறு கேட்பேன்". எனச் சொல்லி கிணத்தருகில் நிற்கையில் ரெபெக்கா அங்கு வந்தாள்.

தலமை வேலையாள் அவளிடம் தண்ணீர் கேட்க அவளோ,"உமக்கும் உம் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் இறைத்து தருகிறேன்" என்றாள்.

அந்த வேலையாள் அவளிடம் பேசி ரெபெக்கா ஆபிரகாமின் உறவினள் என்பதை அறிந்துகொண்டான். பின்னர் ரெபெக்காவின் வீட்டிற்குச்சென்று,"ஆபிரகாமின் மகன் ஈசாக்கு திருமணம் செய்ய ரெபெக்காவை கடவுள் எனக்கு காண்பித்தார். அவளை என்னோடு அனுப்ப முடியுமா?" எனக் கேட்க அவர்களும் ரெபெக்காவின் சம்மதத்தோடு அவளை தலமை வேலைக்காரரோடும், அவள் தோழிகளோடும் அனுப்பிவைத்தனர்.

0 Comments:

Post a Comment

<< Home