15. இரு சகோதரர்கள்
ஈசாக்கிற்கு இரண்டு மகன்கள் பிறந்தனர், இரட்டையர்கள். மூத்தவன் எசாவு, இளையவன் யாக்கோபு(Jacob). எசாவு தலைசிறந்த வேட்டைக்காரன், வேட்டையாடுவதே அவனுக்கு பொழுதுபோக்கு, கொஞ்சம் முரடனும்கூட. யக்கோபு வீட்டு வேலைகள் செய்வதில் ஆர்வம் கோண்டான், சாது, கடவுள் பக்தியில் சிறந்தவன்.ஒரு நாள் எசாவு வேட்டையாடி உயிரே பொய்விடும் அளவுக்கு களைத்து வீடுவந்தான், அப்போது யாக்கோபு சமைத்துக்கொண்டிருந்தான். பசியும் களைப்பும் கொண்டிருந்த எசாவு யாக்கோபிடம்," தம்பி, உயிரே போய் விடும்போலிருக்கிறது குடிக்க கொஞ்சம் கூழ் கொடு" என்றான். யாக்கோபு எசாவுவிடம்,"நீ நம் வீட்டினந்தலைமகன் உரிமையை எனக்கு விட்டுக் கொடுத்தால் இதோ நான் சமைக்கிற கூழை உனக்கு குடிக்கக் கொடுப்பேன்" என்றான்.
பசியின் மிகுதியால் எசாவு,"இனிமேல் வீட்டின் மூத்தமகன் என்கிற உரிமை எனக்கில்லை உனக்குத்தான்" என தன் உரிமைகளை விட்டுக்கொடுத்தான். பின்பு யாக்கொபு சமைத்துக்கொடுத்த கூழை வாங்கி உண்டான்.



3 Comments:
சிறில் கதை எண் 15யிலிருந்து படிக்கவில்லை, இன்று தான் பார்த்தேன், எக்கசக்கமான கதைகள் சொல்லியிருக்கீங்க. இருங்க ஒன்னொன்னா படிச்சு பதில் சொல்கிறேன்.
எங்க வீட்டில் கூட என் தம்பியிடம் இருந்து பிடுங்கி சாப்பிட நான் அவனுக்கு அண்ணன் என்ற மரியாதை விட்டு கொடுத்து விடுவேன். அய்யா என்றெ அழைத்து, அமுக்க வேண்டியதை அமுக்கி விடுவேன் :)
:)
Dear Mr. Alex
Good job. Keep it up.
Thanks
peter
Maryland
Post a Comment
<< Home