3/06/2006

18. இஸ்ராயேல்


யாக்கோபு கானானுக்குத் திரும்புகையில் அவன் அண்ணன் எசாவுவின் கோபத்தை எண்ணி பயந்தான். கடவுள் இரு தூதர்களை அவனுக்குத் துணையாக அனுப்பினார்.

அண்ணனுக்குத் தன் வருகை குறித்து யாக்கோபு தூதுவிட்டான், எசாவு 400 பேர் கொண்ட படையொடு வருவதாக அறிந்தான் தன் உடமைகளையும் வாலையாட்களையும் இரண்டாகப் பிரித்தான், ஒன்று அழிந்தாலும் ஒன்று நிலைக்கும்படி. தன் மனைவிமக்களையும் தனித்து அனுப்பினான்.

அன்றிரவு எல்லோரும் தூங்கியபின் யாக்கோபின் கூடாரத்துக்குள் ஒரு புதியவன் வந்தான். யாகோபுடன் மல்யுத்ததில் ஈடுபட்டான். விடியல்வரை மல்யுத்தம் செய்தபின், வந்திருப்பது கடவுளின் தூதன் என்பதை அறிந்தான் யாக்கோபு.

தூதன் யாக்கோபுவை நோக்கி, "நீ கடவுளிடமும் மனிதர்களோடுமான சோதனைகளில் வெற்றிபெற்றுள்ளாய் இனிமேல் உன் பெயர் யாக்கோபல்ல இஸ்ராயேல்" என்றான்.

பின்னர் எசாவு யாக்கோபை சந்தித்ததில் மகிழ்ச்சிகொண்டான். இருவரும் கட்டித்தழுவி ஒருவரை ஒருவர் மன்னித்தனர்.

அதன்பின் யாக்கோபு கானானில் வாழத்துவங்கினான். ரேச்சேல் பெஞ்சமின் எனும் மகனை ஈன்றபின் இறந்து போனாள். யாக்கோபு மனமுடைந்தான்.

வயதான ஈசாக்கை கவனிக்கும் படி ஈசாக்கின் நாட்டிற்குச் சென்றான். பின்னர் ஈசாக் 180 வயதில் இறந்து போனார்.

0 Comments:

Post a Comment

<< Home