3/10/2006

25. மோயீசன்

மோயீசன் ஒரு நாள் எகிப்திய மேற்பார்வையாளன் ஒருவன் இஸ்ராயேல் அடிமையை அடித்து துன்புறுத்துவதைக் கண்டு கோபம் கொண்டார். அவனை கொன்று புதைத்தார். யாருக்கும் இது தெரியாது என நினத்தார்.

அடுத்த நாள் இரு அடிமைகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டதை தட்டிக் கேட்டார் அப்போது ஒரு எபிரேயன் அவரிடம்,"அந்த மேற்பார்வையாளைனை கொன்றது போல என்னையும் கொல்வாயோ?" என்றான். மோச்ஸ் தான் செய்த கொலை எல்லோருக்கும் தெரிந்துவிட்டதை அறிந்து பயந்தார்.

பாரோவுக்கும் இந்த செய்தி எட்டியது. மோயீசனை கொல்ல ஆணையிட்டான். மோயீசன் உயிர் பிழைக்க எகிப்தை விட்டு பாலையில் வனாந்தரங்களுக்குள் ஓடினார்.

மோயீசன் தப்பி ஓடி மிடியன் எனும் ஊருக்கு வந்தார். அங்கே கிணத்தடியில் இருக்கையில் சில பெண்கள் மந்தைக்கு நீர் கொடுக்க அழைத்து வந்தனர். ஆனால் வழக்கம் போல வேறு மந்தையினர் இவர்களை துரத்திவிடப் பார்த்தனர். மோயீசன் அவர்களிடமிருந்த் இந்தப் பெண்களை காப்பாற்றினார்.

அந்தப் பெண்களெல்லோரும் ஜெத்ரோவின் மகள்கள். நடந்ததை அவர்கள் ஜெத்ரோவிடம் சொல்ல அவர் மோயீசனை தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். மோயீசன் ஜெத்ரோவோடு தங்கினார் அவரின் மந்தையை கவனிக்கும் ஆயனானார்.

ஜெத்ரோ தன் மகள் சிபொராவை மோயீசனுக்கு மணமுடித்து வைத்தார். இருவருக்கும் ஆண்குழந்தை ஒன்று பிறந்தது கெர்ஷோம் எனப் பெயரிட்டனர்.

இதே நேரத்தில் எகிப்தில், மோயீசனை கொல்ல நினைத்திருந்த பாரோ இறந்து போயிருந்தான். புதிய பாரோவின் ஆட்சியிலும் எபிரேயர்களுக்கு பழைய கொடுமைகள் நடந்துகொண்டிதானிருந்தன.

தம் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டு கடவுள் மனமிரங்கினார்...

0 Comments:

Post a Comment

<< Home