3/22/2006

29. செங்கடல் பிளந்தது

எகிப்திலிருந்து எபிரேயர் கிளம்பி மோயீசனை பின்தொடர்ந்தனர். கானான் நாட்டை கடவுள் அவர்களுக்கு வாக்களித்திருந்தார்.

ஜோசப்பின் சவப்பெட்டியை ஜோசப் விரும்பியபடி எபிரேயர்கள் எடுத்துச்சென்றனர். ஜோசப் தன் சவப் பெட்டி கடவுள் வாக்களித்த நாட்டில் புதைக்கப்படும்படி எபிரேயர்கள் எகிப்தை விட்டுப் போகும்போது எடுத்துச்செல்லப்படவேண்டும் என கேட்டிருந்தான்.

எபிரேயர்களின் பயணத்தில் கடவுள் பகலில் மேகத்தூணாகவும் இரவில் ஒளிதரும் நெருப்புத்தூணாகவும் நின்று வழிகாட்டினார்.

எபிரேயர்கள் செங்கடலை அடைந்து ஓய்வுக்காக அங்கே தங்கினர்.

எகிப்தில் பாரோ எபிரேயர்கள் வழிபாடு முடிந்து திரும்புவார்கள் என நினைத்திருந்தான். எபிரேயர்கள் திரும்பப்போவதில்லை என அறிந்து தன் படைகளைத் திரட்டி எபிரேயர்களை பின்தொடர்ந்தான்.

எகிப்திய படைகள் தங்களை நோக்கி வருவததைக்கண்ட எபிரேயர்கள் மோயீசனை பழிக்க ஆரம்பித்தனர். "எங்களை கொல்வதற்கா அழைத்து வந்தீர்" என்றனர்.

கடவுள் மேகத்தூணாகவும் நெருப்புத் தூணாகவும் எகிப்திய படைகளுக்கு முன் நின்று தாக்குதலை தடுத்தார்.


பின்பு மோயீசனை நோக்கி,"உன் ஊன்றுகோலை செங்கடல் மேல் நீட்டு" என்றார். மோயீசனும் தன் ஊன்றுகோலை நீட்டினார் பலத்த காற்று வீசி செங்கடலை பிரித்தது. நிலம் தெரிந்தது. எபிரேயர் அதன் வழி பயணித்து செங்கடலைக் கடந்தனர்.

எகிப்திய படைகளும் அவர்களை கடலுக்குள் பின் தொடர்ந்தனர். மீண்டும் மோயீசன் ஊன்று கோலை செங்கடல் மீது நீட்ட கடல் நீர் எகிப்திய படைகளை சூழ்ந்து அழித்தது.

மோயீசன் கடவுளைப் புகழ்ந்து ஒரு பாட்டை எழுத எபிரேயர்கள் அதை பாடி மகிழ்ந்தனர். கடவுள் தங்களுக்குச் செய்ததை எண்ணி அவருக்கு அடிபணிந்தனர்.

0 Comments:

Post a Comment

<< Home