3/10/2006

24. மோசஸ் பிறந்தார்


மோசஸ், தமிழில் மோயீசன்.

ஜோசப்பின் கதையோடு பழைய ஏற்பாட்டின் முதல் புத்தகமான ஆதியாகமம்(Genesis) நிறைவடைகிறது. அடுத்த புத்தகமான யாத்ராகமம்(Exodus) மோயீசனின் பிறப்போடு துவங்குகிறது. எகிப்திலிருந்து கடவுளால் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு எபிரேயர்கள்(Hebrews) அழைத்துச்செல்லப்பட்ட விடுதலை பயணத்தின் கதையை சொல்கிறது யாத்திரை+ஆகமம்.

ஜோசப்பும் அவன் சகோதரர்களும் ஜோசப்பை நேசித்த பாரோவும் இறந்த பின், சில தலைமுறைகள் போயின. எபிரேயர்கள்(இஸ்ராயேலின் சந்ததியினர்) எண்ணிக்கையில் பெருகினர்.

அப்போது எகிப்தை ஆண்ட பாரோ,"எபிரேயர்கள் நம்மை விட எண்ணிக்கையில் பெருகிவிடுவார்கள். நம் எதிரிகளோடு சேர்ந்து நம்மை எதிர்க்கத்துணிவார்கள். எனவே அவர்களை அடிமையாக்குவோம்" என்று படைகளோடு சென்று எபிரேயர்களை அடிமையாக்கினான்.

எபிரேயர்கள் எகிப்தியர்களுக்கு அடிமையாய் கட்டடங்களுக்கான செங்கல் செய்யும் வேலை செய்யத்துவங்கினார்கள். அடிமைகளானபோதும் அவர்கள் வலிமை குறையவில்லை, மேலும் மேலும் எபிரேயர்களின் எண்ணிக்கை வளர்ந்தது.

பாரே கோபம் கொண்ட்டான். எபிரேயர்களுக்கு பிரசவம் பார்க்கும் இரு செவிலியர்களை அழைத்து எபிரேயப் பெண்களுக்கு ஆண்குழந்தை பெறுமானால் அவற்றை கொன்று போடச்சொன்னான். அவர்களோ அதை செய்யவில்லை. அரசன் கேட்டபோது "எபிரேயப் பெண்கள் வலிமையுள்ளவர்கள் நாங்கள் போகுமுன்பே பிரசவமாகிவிடுகிறது" என்றனர்.

பாரோ கோபத்தின் மிகுதியால் எபிரேயர்களுக்கு பிறக்கும் ஆண்குழந்தைகளை நைல் நதியில் எறிந்து கொன்றுபோடச் செய்தான்.

இந்த நேரத்தில் ஒரு எபிரேய தம்பதிக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. கொலைக்கு பயந்து அதன் தாய் அந்தக் குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து நைலில் விட்டாள். குழந்தையின் அக்கா அந்தப் பெட்டியை பின் தொடர்ந்தாள்.

பெட்டி மிதந்து பாரோவின் மகள் குளித்துக்கொண்டிருக்கும் இடத்திற்குச் செல்ல, அவள் அதை திறந்து பார்க்கையில் அழகிய ஆண்குழந்தையை கண்டெடுத்தாள். குழந்தையின் அக்கா,"இது ஒரு எபிரேயக் குழந்தை. இதற்குப் பால் கொடுத்து பராமரிக்க எபிரேயப் பெண் ஒன்றை அழைத்து வரவா?" என்றாள். பாரோவின் மகளும் சம்ம்மதித்தாள். "நீரிலிருந்து இவனை பெற்றதால் இவனுக்கு மோசே எனப் பெயர் வைப்பேன்" என்றாள்.

மோயீசனின் தாய் அவனை பராமரிக்க அழைத்துவரப் பட்டாள்.

மோயீசன் பாரோவின் மகளின் மகனாக, அரண்மனையில், இளவரசனாக வளர்ந்தான்.

எகிப்திய இளவரசனாக இருந்தபோதும் தன் மக்களுக்கு நடத்தப்பட்ட கொடுமைகளை பார்த்துக் கவலைகொண்டான் மோயீசன்.

2 Comments:

At 10:39 AM, Blogger பரஞ்சோதி said...

மோசஸ் கதை எனக்கு நன்றாக தெரியும். பத்து கட்டளைகள் படத்தை 50 முறைக்கும் மேல் பார்த்திருப்பேன்.

 
At 12:49 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

அருமையான படம், யாத்ராகமத்தை மையமாகவைத்து எடுக்கப்பட்ட படம்தான்.

 

Post a Comment

<< Home